×

காரைக்கால் மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு; இலங்கை கடற்படை அட்டூழியம்

காரைக்கால்: புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த காசாக்குடி மேட்டை சேர்ந்தவர் வைத்தியநாதன். இவருக்கு சொந்தமான விசைப்படகில் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 12 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க கடந்த 1ம் தேதி சென்றனர். இந்நிலையில் நேற்று பிற்பகல் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே இந்திய கடல் எல்லையில் 12 பேரும் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக அங்கு மீன் பிடித்து கொண்டிருந்த 12 மீனவர்களை சிறைபிடித்து கைது செய்தனர். மேலும் மீனவர்களின் விசைப்படகை பறிமுதல் செய்தனர். பின்னர் 12 மீனவர்களை இலங்கைக்கு அழைத்து சென்றனர். மீன்பிடி தடைக்காலம் முடிந்து தற்போது மீண்டும் கடலுக்கு சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

The post காரைக்கால் மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு; இலங்கை கடற்படை அட்டூழியம் appeared first on Dinakaran.

Tags : Karaikal ,Navy ,Vaidyanathan ,Kasakkudi ,Puducherry ,Sri Lanka Navy ,Dinakaran ,
× RELATED ரூ.3.90 கோடி செலவில் காரைக்கால் மீன்பிடி...